தேவையானவை
- கடலைப்பருப்பு - 100 கிராம்,
- பாகு வெல்லம் - 100 கிராம்,
- தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்,
- முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன்,
- ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
- எண்ணெய் - கால் கிலோ
- மேல்மாவுக்கு:
- மைதா மாவு - 75 கிராம்,
- உப்பு - ஒரு சிட்டிகை,
- அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
- சமையல் சோடா - ஒரு சிட்டிகை
செய்முறை :
Step 1.
முதலில் வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.
Step 2.
மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).


No comments:
Post a Comment