தேவையானவை
- ஜவ்வரிசி – கால் கப்
- கெட்டியான மோர் – கால் கப்
- அரிசி மாவு – 1 கப்
- மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
- வெண்ணெய் – 1 டீஸ்பூன்
- காய்ச்சிய சூடான எண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
- எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
- சீரகம் – 2 சிட்டிகை
செய்முறை :
Step 1.
முதலில் ஜவ்வரிசியை 4-5 மணி நேரம் மோரில் ஊறவைக்கவும். ஊறிய பின் ஜவ்வரிசி ஊற வைத்த அளவை விட இரண்டு மடங்காக மாறியிருக்கும். அகலமான பாத்திரத்தில், ஊறிய ஜவ்வரிசி, அரிசி மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், சீரகத்தைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
Step 2.
ஜவ்வரிசி முத்துக்களைக் கைகளால் நன்றாகப் பிசைந்து விடவும். ஊறி இருப்பதால் நன்கு குழைந்து விடும். இத்துடன் காய்ச்சிய சூடான எண்ணெயைச் சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாகப் பிசையவும். பிசைந்த மாவை முறுக்கு அச்்சில் விட்டு, வாணலியில் எண்ணெயைச் சூடேற்றி, அதில் பிழிந்து வேக விடவும். இருபுறமும் வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.


No comments:
Post a Comment