தேவையானவை
- பாசிப்பருப்பு - 100 கிராம்,
- கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
- ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
- சர்க்கரை - 200 கிராம்,
- முந்திரி, திராட்சை - சிறிதளவு,
- நெய் - 100 கிராம்,
- பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
Step 1.
முதலில் சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக்கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். சுவையான அசோகா அல்வா தயார்.


No comments:
Post a Comment