தேவையானவை
- முழு உளுந்து - 200 கிராம்,
- அரிசி - ஒரு டீஸ்பூன்,
- சர்க்கரை - 300 கிராம்,
- கேசரி கலர் - சிறிதளவு,
- ஏலக்காய் எசன்ஸ் - சில துளிகள்,
- சீவிய முந்திரி - சிறிதளவு,
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
Step 1.
முதலில் உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி நேரம் ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து பின் ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்
Step 2.
துணி அல்லது பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். சுவையான ஜாங்கிரி தயார்.


No comments:
Post a Comment